Published : 13 Aug 2021 11:07 AM
Last Updated : 13 Aug 2021 11:07 AM

பட்ஜெட் 2021; பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இதைத்தொடர்ந்து, பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அதன் முக்கிய அம்சங்கள்:

* பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்.

* அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும்.

* 2.05 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

* பொது நிலங்களை முறையாக பயன்படுத்த அரசு நில மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும்.

* அரசு நிதி சார்ந்த வழக்குகளை கையாள வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

* அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைக்கப்படும்.

* அனைத்து பொது சேவை துறைகளிலும் மின்னணு அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்.

* அரசின் உட்தணிக்கை முறையில் சீர்திருத்தம் செய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x