Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM

தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

சென்னை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஆக. 9) முதல் 12-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘இன்றுமன்னார் வளைகுடா பகுதிகளிலும், ஆக. 9, 10-ம் தேதிகளில் தென்கிழக்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், ஆக. 9 முதல்12-ம் தேதி வரை தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தகாற்று வீசும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x