Published : 13 Feb 2016 08:26 AM
Last Updated : 13 Feb 2016 08:26 AM

கடந்த ஆண்டில் 15,642 பேர் பலியான சோகம்: அச்சமூட்டும் சாலை விபத்துகள்.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்

தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் மொத்தம் 15 ஆயிரத்து 642 பேர் உயிரிழந் துள்ளனர். 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 452 பேர் அதிகமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கி றது. அதற்கு ஏற்றவாறு சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், மற்றொருபுறம் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சிக்குவோரை மீட்பது, சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.3.8 லட்சம் கோடி செலவிடப்படுகிறது.

இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தால் இறக்கிறார். தினமும் 16 குழந்தைகள் உயிரிழக்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 1,214 சாலை விபத்துகள் நடக்கின்றன. இதில் ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 16 பேர் இறக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் என மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சாலை விபத்து உயிரிழப்பு பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 48 சதவீத விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமுறைகளை மீறுவது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகத்துடன் செல்வது ஆகியவை முக்கியமாக காரணங்களாக இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 69,059 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 15,642 பேர் இறந்துள்ளனர். இது, முந்தைய ஆண்டை (2014)விட 452 அதிகமாகும். இதுமட்டுமின்றி கடந்த ஆண்டில் 79,701 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதா வது: தமிழகத்தில் வாகனங் களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் இடங் களை கண்டறிந்து சாலை விரிவாக் கம், புதிய சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

கட்டாய ஹெல்மெட்

ஹெல்மெட் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஆனாலும், மக்களிடம் மனமாற்றம் ஏற்படாமல் சாலை விபத்துகளை குறைக்க முடியாது. சாலை விதிகளை கட்டாயம் மதிக்க வேண்டும். மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவது, செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுவதை தவிர்க்க மக்கள் உறுதி ஏற்க வேண்டும்.

வாகனங்களுக்கு வேகக்கட்டுப் பாடு கருவிகள் பொருத்துதல், ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும், முறையாக பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்க நட வடிக்கை எடுத்து வருகிறோம். ஓட்டுநர் பயிற்சியை கணினி மூலம் கண்காணிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் 14 வட்டார போக்குவரத்து அலு வலகங்களில் ‘கம்ப்யூட்டர் டிராக்’ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அரசின் இதுபோன்ற திட்டங்கள் மூலம் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் குறையும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x