Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM
கோயில்கள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பணியாளர்கள் பதிவேற்றம் செய்ய உதவிட இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறையின் ஆணையர் குமரகுருபரன் அனைத்து இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் கோயில்கள் பற்றிய பொதுவான விவரங்கள், சொத்து விவரங்கள், வரவு - செலவு திட்டம், கேட்பு வசூல் நிலுவை மற்றும் இணைய வழி சேவைகள் முதலியவற்றை ஒருங்கிணைத்து கோயில் மேலாண்மை திட்டத்தின்படி நிக் நிறுவனத்தின் மென்பொருள் மூலம் வடிவமைப்பு மற்றும் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
கோயில்கள் பற்றிய இந்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது, அது தொடர்பான அறிக்கைகள் பெறுவதில் ஏற்படும் சிரமங்கள், சந்தேகங்கள் முதலியவற்றை தெளிவுப்படுத்தவும், கோயில் பணியாளர்கள், தகவல்களை பதிவேற்றம் செய்ய உதவவும், தலைமை அலுவலகத்தில், ஒருஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அலுவலக வேலை நேரங்களில் 044-28339999 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டத்தின்படி பதிவேற்றம் செய்தல் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். இனிநிக் நிறுவனத்தினரை நேரடியாக தொடர்பு கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் கூறியுள்ளார்.
044-28339999 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவேற்றம் தொடர்பான சந்தேகங்களை கேட்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT