Published : 13 Jun 2014 09:38 AM
Last Updated : 13 Jun 2014 09:38 AM

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது: திருவள்ளூர் அருகே பரபரப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள தேக்கு தோட்டம் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றார் சிறுமி. அப்போது அவரை பின் தொடர்ந்த சென்ற மோகன் என்பவரின் மகன் விஜி (26) யாரும் இல்லாத இடத்தில் வைத்து மிரட்டி வாயில் துணியை வைத்து அடைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து ஆர்.கே.பேட்டை போலீஸார் வியாழக்கிழமை விஜியை கைது செய்தனர்.

உ.பி. சம்பவம்

உத்திரப்பிரதேசத்தில் அண்மையில் இயற்கை உபாதைக்காக ஒதுங்கிய இரு தலித் சகோதரிகளை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்து கொன்று தூக்கில் தொங்கவிட்டனர்.

நாடு முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்திய இச்சம்பத்தைப் போலவே திருவள்ளூர் அருகேயும் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

பெண் குழந்தைகள் தனியாக திறந்தவெளி ஒதுக்குப்புறத்தில் இயற்கை உபாதைகளுக்கு பாதுகாப்பில்லாமல் ஒதுங்கக் கூடாது என்றும் இந்த விவகாரத்தில் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x