Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM
கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 1,911 அலுவலக உதவியாளர்கள், 110 சுகாதார பணியாளர்கள், 496 காவலர்கள், 593 மசால்ஜி மற்றும் இரவுக் காவலர்கள், 189 துப்புரவு பணியாளர்கள், 28 தோட்டக்காரர்கள் உள்ளிட்ட 3,200-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதன்படி இந்த பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இதனால் பெரும்பாலான விண்ணப்பதாரர்களுக்கு வெளி மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
இதில் பெரும்பாலானோர் முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் காலை 11 மணி முதல் 12 மணி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வில் பலர் பங்கேற்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT