Published : 29 Jul 2021 03:14 AM
Last Updated : 29 Jul 2021 03:14 AM

கூடா நட்புக்கு இடையூறாக இருந்ததாக 4 வயது மகனை கொன்ற தாய் உட்பட 2 பேர் கைது

சிறுவனை கொன்ற அபர்ணா, சுரேஷ்.

நாகப்பட்டினம்

கூடா நட்புக்கு இடையூறாக இருந்த 4 வயது மகனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற தாய் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த்(31). இவரது மனைவி அபர்ணா(22). இவர்களது மகன் கவித்திரன்(4). கருத்து வேறுபாடு காரணமாக சிறிது காலம் பிரிந்து வாழ்ந்த கார்த்திக் அரவிந்த், அபர்ணா தம்பதியை உறவினர்கள் சமாதானம் செய்து சேர்த்து வைத்தனர். பின்னர், இருவரும் நாகை தாமரைக்குளம் தென்கரை யில் வசித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து கார்த்திக் அரவிந்த் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், தாமரைக் குளம் மேல்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சுரேஷ்(24) என்பவருடன் அபர்ணாவுக்கு கூடா நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நாகை காடம்பாடி சூர்யா நகரில் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், கூடா நட்புக்கு இடையூறாக இருந்ததாக தனது மகன் கவித்திரனை கடந்த 26-ம் தேதி இரவு அபர்ணா தனது துப் பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், இதற்கு சுரேஷ் உடந்தையாக இருந்ததா கவும் கூறப்படுகிறது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் சென்னையில் உள்ள கார்த்திக் அரவிந்த்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் அளித்த தகவலின்பேரில் வெளிப்பாளையம் போலீஸார் நேற்று முன்தினம் கவித்திரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அபர்ணா, சுரேஷ் ஆகியோரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x