Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM
அசாமில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் கதிர்வேல் உயிரிழந்தார்.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதிவாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் கதிர்வேல்(36). இவருக்கு சண்முகப்பிரியா(25) என்ற மனைவியும், ஹனிஷ்க்(7), பார்த்திவ்(3) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கதிர்வேல் ராணுவ வீரராகப் பணியாற்றி வந்தார்.
இவர் அசாமில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியில் இருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி கதிர்வேல் இறந்தார். ராணுவ அதிகாரிகள் அவரது உடலை அசாம் தலைமையகத்துக்குக் கொண்டு சென்று அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் விமானம் மூலம் (இன்று) இரவு 8.30 மணியளவில் மதுரை வருகிறது. பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT