புதுச்சேரியில் புதிதாக 78 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் புதிதாக 78 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுச்சேரியில் புதிதாக 78 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்ததுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (ஜூலை 20) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,488 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில் 54 பேருக்கும், காரைக்காலில் 17 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேவில் 5 பேருக்கும் என மொத்தம் 78 (1.20 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 173 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 815 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 988 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

மேலும் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர், காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,781 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது. புதிதாக 128 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 54 (97.69 சதவீதம் ) ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 14 லட்சத்து 37 ஆயிரத்து 329 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 12 லட்சத்து 27 ஆயிரத்து 941பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும், 6 லட்சத்து 46 ஆயிரத்து 11 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 குழந்தைகளுக்கு கரோனா:

புதுச்சேரியில் தற்போதைய நிலவரப்படி கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 4 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட ஒரு குழந்தையும் அடங்குவர். இதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்ட தாயுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு பச்சிளங்குழந்தையும் உள்ளது. இவர்கள் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in