Published : 20 Feb 2016 08:58 AM
Last Updated : 20 Feb 2016 08:58 AM

என் மீது நில அபகரிப்பு வழக்கு இல்லை: பொங்கலூர் பழனிசாமி விளக்கம்

என் மீது போடப்பட்ட நில அபகரிப்பு வழக்கு முடிந்துவிட்டது என திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்தார்.

‘தேர்தல் பிரச்சார களத்தை கலக்கப் போகும் வழக்குகள் - லாவணி பாடத் தயாராகும் தலைவர் கள்’ என்ற செய்தி ‘தி இந்து’வில் வெளிவந்தது.

அந்த செய்தி தொடர்பாக பொங்கலூர் பழனிசாமி அளித்துள்ள விளக்கம்:

பொங்கலூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மணி மீது, திருப்பூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் நில அபகரிப்பு வழக்கு தொடுத்தார். மணி எனது நண்பர் என்ற முறையில் போலீஸார் வேண்டுமென்றே என்னையும், என் மகனையும் அந்த வழக்கில் சேர்த்தனர். சில மாதங்களில் மணியுடன் சமரசம் செய்துகொண்டு அந்த வழக்கை வெங்கடேஷ் திரும்பப் பெற்றுக் கொண்டார். பின்னர், என்னை சந்தித்து தவறு நடந்து விட்டதென்று கூறி மன்னிப்புக் கோரினார் வெங்கடேஷ். பிரச்சினை முடிந்துவிட்டது.

எனது மருமகன் ஆனந்த் என்றும் அவர் மாநகரச் செயலாளர் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எனக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x