Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

‘உழவர்களை ஒருபோதும் கைவிடமாட்டேன்’- முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை

நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என உறுதியளிக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரி வித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்பதால் அதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், வேளாண்துறையில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று தமிழக முதல்வருக்கான முகநூல்மற்றும் ட்விட்டர் பதிவுகள்வாயிலாக வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்’ என்பது பழமொழி.அவ்வாறு நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

கருணாநிதியின் திருக்குறள் உரை

மேலும், ‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதுஉம் விட்டேமென் பார்க்கும் நிலை’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, அதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய உரையான, ‘எல்லா பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள் கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்’ என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்பது பழமொழி. அவ்வாறு நம் உயிர்வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x