Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையராக சி.அமுதா பொறுப்பேற்றார்.
கடந்த 1999-ல் உதவி வருங்கால வைப்புநிதி ஆணையராக பணியில் சேர்ந்த அமுதா, கோவை, தாம்பரம், சேலம், புதுச்சேரியில் உள்ள மண்டல அலுவலகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
சென்னையில் பொறுப்பேற்பதற்கு முன், பெங்களூரூவில் உள்ள மண்டல அலுவலகத்தில் ஆணையராகப் பணியாற்றினார். இந்த தகவலை, சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர்-2 பிரணித் ஜோஷி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT