Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM

ஆன்லைன் வகுப்பில் ஆபாச படங்களை பகிர்ந்த கிருஷ்ணகிரி இளைஞர் கைது

கோப்புப்படம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதில், மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களை பள்ளி நிர்வாகத்தினர் பதிவு செய்து இணைக்கும்போது, ஒரு மாணவியின் செல்போன் எண்ணுக்குப் பதிலாக வேறு ஒரு செல்போன் எண்ணை தவறுதலாக பதிவுசெய்துவிட்டதாகக் கூறப்படு கிறது.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்போது, தவறாக பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து ஆபாச செய்திகளும், படங்களும் பகிரப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், இதுகுறித்து திருவாரூர் எஸ்.பி சீனிவாசனிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, எஸ்.பி உத்தரவின்பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம், செய்திகளைப் பகிர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி வீராச்சிகுப்பத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் மோகன்குமார்(26) என்பவரை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x