Published : 05 Jul 2021 03:13 AM
Last Updated : 05 Jul 2021 03:13 AM

தாம்பரம் - நாகர்கோயில் இடையே மீண்டும் அந்த்யோதயா ரயில்: முன்பதிவு செய்வோருக்கே அனுமதி

சென்னை

தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. இருப்பினும், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தாம்பரம் - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லாத அந்த்யோதயா ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயிலை கடந்த 1-ம் தேதி முதல் இயக்கி வருகிறோம். இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. ஆனால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. முன்பதிவு இல்லாத டிக்கெட்கள் விநியோகிக்கப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x