Published : 28 Jun 2021 03:13 AM
Last Updated : 28 Jun 2021 03:13 AM
பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதில் 78-வது நிகழ்ச்சியாக நேற்று பிரதமர் உரையாற்றினார்.
தாம்பரம் நகர பாஜக சார்பில் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் தாம்பரம், சண்முகம் சாலையில் பிரம்மாண்ட எல்இடி திரை அமைத்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்ட பாஜக பொறுப்பாளர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
“உலகிலேயே தமிழ்மொழி சிறந்த மொழி. நான் தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் பெரிய அபிமானி. தமிழ் மீதான என் அன்பு என்றும் குறையாது” என பிரதமர் மோடி தமிழ் மொழி குறித்து பேசியதையும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற தமிழக வீரர் பவானி தேவியை பாராட்டியதைக் கேட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT