Published : 05 Jun 2021 08:33 PM
Last Updated : 05 Jun 2021 08:33 PM

தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் அவர்கள் முன்பு வகித்த பதவிகள்:

1. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆகப் பதவி வகித்த பி.விஜயகுமார் மாற்றப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. சைபர் பிரிவு எஸ்.பி.-1 ஆகப் பதவி வகிக்கும் எம்.சுதாகர் மாற்றப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. சிபிசிஐடி சைபர் செல் பிரிவு எஸ்.பி. சிபிச்சக்கரவர்த்தி மாற்றப்பட்டு, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா மாற்றப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பதவி வகிக்கும் அல்லாடி பவன் குமார் ரெட்டி மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா மாற்றப்பட்டு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் பா.மூர்த்தி மாற்றப்பட்டு திருச்சி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. திருப்பூர் நகரத் தலைமையிடத் துணை ஆணையர் சுந்தரவடிவேல் மாற்றப்பட்டு, கரூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி. மணி மாற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. காத்திருப்போர் பட்டியலில் இருந்த பெரோஸ் கான் அப்துல்லா மாற்றப்பட்டு, அரியலூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் மாற்றப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. நெல்லை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பி.ஆர்.ஸ்ரீனிவாசன் மாற்றப்பட்டு, திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

14. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. ஜவஹர் மாற்றப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

15. தென்காசி மாவட்ட எஸ்.பி. சுகுணாசிங் மாற்றப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் எட்டாவது பட்டாலியன் கமாண்டன்ட் பதவி வகிக்கும் ஆஷிஸ் ராவத் மாற்றப்பட்டு, நீலகிரி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சசிமோகன் மாற்றப்பட்டு, ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

18.கரூர் மாவட்ட எஸ்.பி. செஷாங் சாய் மாற்றப்பட்டு, திருப்பூர் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் மாற்றப்பட்டு, சேலம் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

20. சென்னை சைபர் கிரைம் பிரிவு-3 எஸ்.பி.யாகப் பதவி வகித்த சரத்குமார் தாகூர் மாற்றப்பட்டு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. கலைச்செல்வன் மாற்றப்பட்டு, தருமபுரி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

22. தேனி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி மாற்றப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

23. அரியலூர் மாவட்ட எஸ்.பி., பி.பாஸ்கரன் மாற்றப்பட்டு, மதுரை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

24. சென்னை காவலர் நலன் ஏஐஜி மனோகர் மாற்றப்பட்டு, விருதுநகர் எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

25. திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்.பி., டி.செந்தில்குமார் மாற்றப்பட்டு, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

26. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. டோங்க்ரா பிரவீன் உமேஷ் மாற்றப்பட்டு, தேனி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

27. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி., ஆர்.கிருஷ்ணராஜ் மாற்றப்பட்டு, தென்காசி மாவட்ட எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x