Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்து தேவையான தடுப்பூசிகளை கேட்டுப் பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தினார்.
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக உள்ளதால் ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் போதிய தடுப்பூசிகளை வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரை நேற்று சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் என்ற செல்வம், ஐயப்பன் ஆகியோர் மனு வழங்கினர்.
பின்னர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்து தேவையான தடுப்பூசிகளை பெற வேண்டும். மாநகராட்சி குப்பை வண்டிகளை சுத்தப்படுத்தி, அதன் மூலம் காய்கறி விநியோகம் செய்கின்றனர். இதனால் குப்பை வண்டிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு குப்பைகள் சிதறி கிடக்கின்றன. குப்பை வண்டியில் காய்கறிகளைக் கொண்டு வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நோய் தொற்று உள்ள உறவினர்களுக்கு முன்புபோல கவுன்சலிங் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: கரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பது அரசின் செயல்பாடாக உள்ளது. தற்போது கரோனா தொற்று குறைந்திருந்தாலும் உயிரிழப்பு 2 மடங்கு அதிகமாக உள்ளது. ஆகவே பரிசோதனை மையங் களையும், சிகிச்சை மையங்களையும் அதிகப்படுத்த வேண்டும். பரிசோதனை முடிவை 3 நாட்களுக்கு பிறகே தெரிவிப்ப தாகக் கூறப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT