Published : 22 May 2021 03:12 AM
Last Updated : 22 May 2021 03:12 AM

காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.25 லட்சம் கரோனா நிவாரண நிதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் கடந்த 19-ம் தேதி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து பலர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் காமக்கோடி பீடம் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். கரோனா தொற்று அதிகம் உள்ள இந்தச் சூழ்நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் வழங்க சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த உதவித் தொகையை மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், நிர்வாகிகள் பம்மல் விஸ்வநாதன், வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலன், டி.எஸ்.ராகவன் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x