Published : 16 May 2021 03:16 AM
Last Updated : 16 May 2021 03:16 AM

முதல்வர் நிவாரண நிதிக்கு தமாகா சார்பில் ரூ.10 லட்சம்: முதல்வரிடம் ஜி.கே.வாசன் வழங்கினார்

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு, தமாகா சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிப்பதை தடுப்பதற்கு தமிழக அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.

கரோனாவை படிப்படியாக குறைப்பதற்கு ஒருமித்து செயல்பட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றுக்கு உறுதுணையாக செயல்படும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று (நேற்று) முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x