Published : 25 Dec 2015 10:03 AM
Last Updated : 25 Dec 2015 10:03 AM
கலைஞர்களின் முழு விவரங்களை சேகரித்து பதிவு செய்யும் பணியை நடிகர் சங்கம் தொடங்கவுள்ளது. இதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை காலை நடிகர் சங்க மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, சத்யராஜ், சிவக் குமார், சூர்யா, வடிவேலு ஆகி யோர் கலந்துகொள்கிறார்கள்.
இதில், உறுப்பினர்களின் கலைத்திறன், முகவரி, குடும்பம் பற்றிய முழு விபரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப் பட்டால் அதைப் பற்றிய விபரங்கள் என அனைத்து விஷயங்களும் சேகரிக்கப்படும். நடிகர் சங்கத் தேர்தலின்போது பாண்டவர் அணி அளித்த வாக்குறுதிகளின் ஒன்றான ‘குருதட்சணை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் முதல் கட்டமாக இந்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங் களிலும் கலைஞர்களைப் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்கான வேலை களில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால் உள்ளிட்டவர்கள் ஈடு பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT