Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
ஆலந்தூர் கற்பக விநாயகர் கோயில் தெருவில் கே.பி.முரளிகிருஷ்ணன் என்பவர், கரோனாநோய் தடுப்பு நடவடிக்கையாக கட்டணமில்லா மூலிகை நீராவிபிடித்தல் மையத்தை தனதுவீட்டில் அண்மையில் தொடங்கியுள்ளார்.
நீலகிரி தைலம், மிளகு,மஞ்சள்தூள், இஞ்சி சாறு, ஓமம், ஆகியவற்றை கொதிக்கவைத்து, குழாய் வழியாக நீராவிவெளியேறும்படி செய்துள்ளார்.
தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை இம்மையம் செயல்படுகிறது. கரோனா தடுப்புநடவடிக்கையில் ஒன்றான நீராவி பிடிக்கும் மையத்துக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். மேலும், நீராவி பிடிக்க வருபவர்களுக்கு கபசுரக் குடிநீரும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து முரளி கிருஷ்ணன் கூறும்போது, "தற்போது கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறுதரப்பினரும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
அந்தவகையில், என் வீட்டுக்கு முன் ஐந்து பேர் அமரும் வகையிலான நீராவி மையத்தை அமைத்து, குழாய்மூலம் பொதுமக்கள் சுவாசிக்கும் வகையில் நீராவி மையம் அமைத்துள்ளேன். மூலிகை கலந்த நீராவியால் கரோனா கட்டுப்படும் என்பதால், ஏராளமானோர் இங்கு வந்து மூலிகை கலந்த நீராவியை சுவாசித்துப் பயனடைகின்றனர். இதற்கு கட்டணம் கிடையாது. இந்த மையம் தொடர்ந்து செயல்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT