Published : 21 Dec 2015 08:45 AM
Last Updated : 21 Dec 2015 08:45 AM
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆன்மிக இளைஞர் அணி தலைவர் கோ.ப.செந்தில்குமார் அவற்றை வழங்கினார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் வீடு இழந்தவர்களுக்கு போர்வை, அரிசி, சமையல் பாத்திரங்கள், கட்டில், பீரோ, ஸ்டவ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு அடுத்த வெங்கடேஸ்வரா நகரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான குட்வில் இல்லத்துக்கு தேவையான உபகரணங்கள், அன்பு இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளுக்கு ஒரு மாத மளிகை பொருட்கள், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், நாற்காலி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரி முதல்வர் வா.ராமசாமி, கல்லூரி துணை முதல்வர் இரா.ராஜசேகரன், இயக்குநர் சு.ஜெயஸ்ரீ, நிர்வாக அலுவலர் வி.இ.ஏழுமலை, நிர்வாக இணை அலுவலர் சிவராமன், தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் தமிழ் வேந்தன், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT