Published : 24 Apr 2021 06:56 PM
Last Updated : 24 Apr 2021 06:56 PM

ஆக்சிஜனுக்காக ஆலை திறப்பதை அரசியலாக்கக் கூடாது: எல்.முருகன் கருத்து

சென்னை

ஸ்டெர்லைட் ஆலையை அரசும் நீதிமன்றமும் சேர்ந்து திறக்க முடிவெடுத்தால் அதை வரவேற்போம் என்றும், இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நம்முடைய உயிர் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு நிறுவனம் தன்னார்வத்துடன் ஆக்சிஜனைத் தயாரித்துத் தருகிறோம் என்று கூறுகிறது. இதே கருத்தை உச்ச நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றமும் தமிழக அரசிடம் ஏன் நீங்களே ஆலையை எடுத்து நடத்தக் கூடாது என்று கேட்டுள்ளது.

ஆக்சிஜன் ஆலையை அரசே அப்படி எடுத்து நடத்தும்பட்சத்தில் மக்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பது எளிதாகும். அதேபோல அந்தப் பகுதி மக்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்கத்தானே செய்யும்.

இதை ஆக்சிஜன் தயாரிப்பதாக மட்டுமே பார்க்க வேண்டுமே ஒழிய அரசியலாக்கக் கூடாது, அல்லது வேறு உள்நோக்கமும் இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. மக்களுக்காக ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை அரசும் நீதிமன்றமும் சேர்ந்து திறக்க முடிவெடுத்தால் அதை வரவேற்போம்'' என்று எல்.முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x