Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Mar 2014 12:00 AM
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி) தொகுதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி, மமகவுக்கு மயிலாடுதுறை, புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்குவதில் கடந்த சில தினங்களாக இழுபறி நிலை இருந்து வந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் சுமுக முடிவு ஏற்படவில்லை. புதன்கிழமை மாலையில் பேச்சுவார்த் தையின்போது பாதியிலேயே திருமாவளவன் வெளியேறினார். பத்திரிகையாளர்களை சந்திப் பதைத் தவிர்க்க அறிவாலயத்தின் பின்பக்கம் வழியாக நடந்தே சென்றுவிட்டார்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இரு தரப்பினரும் தெரிவித்திருந்தனர். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் மாலை 7.20 மணிக்கு அறிவாலயம் வந்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் குழுவினர் இரவு 8.30 மணிக்கு வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தை தொடங்கியது. இறுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT