Published : 29 Dec 2015 08:55 AM
Last Updated : 29 Dec 2015 08:55 AM

சென்னையில் 31-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 20-ம் தேதி அறிவித்தார். ஆனால், கூட்டம் நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை திருவான்மியூர் டாக்டர் வாசுதேவன் நகரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று அறிவித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே வானகரம் பகுதியில் உள்ள வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில்தான் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு இடம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x