Published : 29 Dec 2015 08:55 AM
Last Updated : 29 Dec 2015 08:55 AM
சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 20-ம் தேதி அறிவித்தார். ஆனால், கூட்டம் நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை திருவான்மியூர் டாக்டர் வாசுதேவன் நகரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று அறிவித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே வானகரம் பகுதியில் உள்ள வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில்தான் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு இடம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT