Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றுதமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கு வாக்குச்சாவடி மையத்துக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று காலை 6.55 மணிக்கு வந்து, வரிசையில் காத்திருந்தார்.
வாக்குப்பதிவு தொடங்கியதும், காலை 7.05 மணி அளவில் தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வாக்குச்சாவடிகளில் கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. நான் போட்டியிடும் தாராபுரம் தொகுதிக்கு செல்லவேண்டி உள்ளதால், முதலாவதாக வந்து என் வாக்கை செலுத்தியுள்ளேன். மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT