Last Updated : 06 Apr, 2021 04:40 PM

 

Published : 06 Apr 2021 04:40 PM
Last Updated : 06 Apr 2021 04:40 PM

திருப்பத்தூர் அருகே வாக்குச்சாவடி அலுவலர் மாரடைப்பால் மரணம்

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வாக்குச்சாவடி அலுவலர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

திருப்பத்தூர் தொகுதி, காரையூர் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலராக திருவேம்பத்தூரைச் சேர்ந்த ரஜினிகாந்த் (40) நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு வாக்குச்சாவடி பணியாளர்கள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ரஜினிகாந்தை மாற்றிவிட்டு, மாற்று வாக்குச்சாவடி அலுவலர் நியமிக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடந்து வந்தது. ஆனால், அங்கேயே இருந்த ரஜினிகாந்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

வாராப்பூர் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக ரஜினிகாந்த் பணியாற்றி வந்துள்ளார். இதுகுறித்து கண்டவரயான்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x