Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்: அகில பாரத துறவியர் பேரவை வேண்டுகோள்

கோவை

இந்து கோயில்கள் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கின்ற அரசியல் கட்சிக்கே இந்து சமய மக்கள் வாக்களிக்க வேண்டும் என அகில பாரத துறவியர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து பேரவை பொறுப்பாளர்கள் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் ஆகியோர் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இந்து சமய நம்பிக்கை, இந்து கலாச்சாரம், வழிபாட்டு முறை, கோயில்கள், கடவுள்கள், கடவுள் சிலைகள், இந்து பெண்கள், தமிழ் கடவுள் முருகன் மற்றும் கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி நாத்திகவாதிகளும், இந்து விரோத சக்திகளும் பொது மேடைகளில் அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து பேசிவருகின்றனர்.

இவ்வாறு பேசுவதன் மூலமாகசிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற முடியும் என்ற நம்பிக்கையில் அரசியல்வாதிகள் மற்றும் இந்து விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய ஓட்டு வங்கி இந்து விரோத சக்திகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இந்துக்கள் ஒருங்கிணைந்து வரும் தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

இந்து கோயில்கள், கலாச்சாரத்தை பாதுகாக்கின்ற வகையிலும், இந்து அறநிலையத் துறையை அரசிடமிருந்து சுதந்திரமான நேர்மையான அமைப்பின் மூலமாக நிர்வகிக்க வழிவகுக்கும் அரசியல் கட்சிக்கே இந்துக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நாகசக்தி பீடம் பாபுஜி அடிகளார், விஷ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x