Published : 16 Nov 2015 08:57 AM
Last Updated : 16 Nov 2015 08:57 AM
பெட்ரோல் விலை லிட்டருக்கு 37 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 87 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. மாதத்துக்கு இருமுறை இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இம்மாதம் 1-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசா குறைக்கப்பட்டது. டீசல் விலை யில் எவ்வித மாற்றமும் செய்யப் படவில்லை.
இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 37 பைசாவும், டீசல் விலை 87 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT