Published : 30 Mar 2021 03:16 AM
Last Updated : 30 Mar 2021 03:16 AM
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் மதுரை வீரன் சுவாமி கோயிலில் நேற்று மாலை சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பிறகு தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் அதிமுக வெற்றிபெறும் வகையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில், அவர் தமிழகம் முழுவதும் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தஞ்சை மாவட்ட கோயிலி லிருந்து ஆன்மிக பயணத்தை தொடங்கிய அவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து ராமேசுவரம் ராமநா தசுவாமி கோயிலில் தரிசனம் செய் தார். தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வரு கிறார்.
அதனையொட்டி நேற்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அவருடன் உறவினர் டாக்டர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் வழிபாடு நடத்தினார்.
பின்னர் அம்மன் சன்னதி வாசலை ஒட்டி கிழக்குச் சித்திரை வீதியிலுள்ள மதுரை வீரன் சுவாமி கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் அவர் திருப்பரங்குன்றம் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT