Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM

தமிழகத்தை மீட்டெடுக்க வாய்ப்பு தாருங்கள்: திண்டுக்கல்லில் டிடிவி.தினகரன் பேச்சு

ஒட்டன்சத்திரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்.

ஒட்டன்சத்திரம்

தமிழகத்தை சீரழிவில் இருந்து மீட்டெடுக்க வாய்ப்பு தாருங்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசினார்.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலை யம் அருகே அமமுக வேட் பாளர்களை ஆதரித்து அவர் பேசி யதாவது:

200 தொகுதிகளில் நாங்கள் தான் வருவோம் என்று சொல் கிறவர்கள், திருச்சியில் தபால் ஓட்டுபோட பணம் தருகின்றனர். பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல் லாத நிலையில் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது.

அரசு கஜானா தற்போது காலி யாக உள்ளது. ஏரி, குளங்களை தூர்வாருவதற்குப் பதிலாக அரசு கஜானாவை தூர்வாரிவிட்டார் முதல்வர். அரசு காரில் அமைச்சர் ஒருவரின் பணம் பிடிபட்டதால் தான் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. அது யார் பணம், எவ்வளவு பிடிபட்டது என்பது விரைவில் வெளியில் வரும். திமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துகள் சூறையாடப்படும். பணத்தைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள். உண்மையான அம்மா ஆட்சி வந்தால் தான் தமிழகத்துக்கு நல்லது. உங்களுக்காக உழைப் பவர்களுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். வேடசந்தூரில் அவர் பேசும்போது, உங்களை விலைக்கு வாங்க அதிமுக, திமுகவினர் தயாராக உள்ளனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சிந்தித்து வாக்களியுங்கள் என்றார்.

பின்னர் திண்டுக்கல்லில் தின கரன் பேசியதாவது:

தமிழகத்தை சீரழிவில் இருந்து மீட்டெடுக்க வாய்ப்பு தாருங்கள். திமுக வெற்றி பெறும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். அது உண்மை இல்லை. ஆளும் கட்சியினர் தொண்டர்களையும், மக்களையும் நம்பவில்லை. திண்டுக்கல் சீனி வாசன் மாற்றிமாற்றிப் பேசுகி றார். என்ன பேசுகிறார் என அவருக்கும் தெரியவில்லை. அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை. அவருக்கு ஓய்வு கொடுப்பது தான் நல்லது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x