Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM
நாகை மாவட்டத்தில் உள்ள மும்மதத் தலங்களுக்கு சென்று, சசிகலாநேற்று பிரார்த்தனை செய்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நாகை மாவட்டம் நாகூரில் உள்ள நாகநாதர் சுவாமி கோயிலுக்கு நேற்று பிற்பகல் 3.55 மணிக்கு தன் உறவினர்களுடன் வந்தார். அங்கு ராகு, கேது சன்னதியில் நடைபெற்ற ராகு தோஷ பரிகார பூஜையில் அவர் கலந்துகொண்டார். அவருடன் அமமுக மாவட்டச் செயலாளரும், நாகை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான மஞ்சுளா சந்திரமோகன்உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
அப்போது, சசிகலாவிடம், ‘கோயில் கோயிலாகச் செல்கிறீர்களே. இது ஆன்மிக பயணமா’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உலக மக்கள் அனைவரும்நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் கோயில் கோயிலாகச் செல்கிறேன்” என்றார்.
பின்னர், அங்கிருந்து அவர் வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து, நாகூர் ஆண்டவர் தர்ஹாவுக்கும் சென்று சசிகலா பிரார்த்தனை மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT