Published : 27 Mar 2021 03:15 AM
Last Updated : 27 Mar 2021 03:15 AM

பாஜக தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து குறித்து தகவலில்லை: ரங்கசாமிக்கு கேள்வி எழுப்பும் நாராயணசாமி

பாஜக தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பற்றி தகவல்இல்லை. இதுபற்றி ரங்கசாமி நிலைப்பாடு என்ன என்பதை தெளி வுப்படுத்துமாறு நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் பாஜக தேர்தல்அறிக்கையில் பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட தனி மாநில அந்தஸ்து கோரிக்கை மற்றும் பல ஆயிரம் கோடி புதுச்சேரி கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி இடம் பெறும் என்று கூட்டணிக் கட்சிகள்உட்பட பலரும் எதிர்பார்த்தனர். மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள தால் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு இதை எளிதில் நடை முறைப்படுவார்கள் என்றும் கருதி னர். கூட்டணியில் உள்ள என்ஆர் காங்கிரஸ் கட்சி தனிமாநில அந்தஸ்து கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறது. இந்நிலை யில் பாஜக தேர்தல் அறிக்கையில் தனி மாநில அந்தஸ்து பற்றிய வாக்குறுதி இடம் பெறவில்லை.

இதுபற்றி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “கடந்த 2011-ம் ஆண்டு மாநில அந்தஸ்து வாக்கு உறுதி கொடுத்து என்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. மேலும், வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து தேர்தலை சந்திப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதற்காக தேர் தலை புறக்கணிக்கவும் தயார் என்று ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

தற்போது பாஜக தேர்தல் அறிக்கையில், மாநில அந்தஸ்து குறித்து எந்த தகவலும் இல்லை. இதுதொடர்பாக ரங்கசாமியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்’’ என்றுகேட்டுள்ளார் கூட் டணியில் இருந்துரங்கசாமி விலகுவாரா என்று கேள்வியும் எழுப்பி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x