Last Updated : 26 Mar, 2021 04:00 PM

 

Published : 26 Mar 2021 04:00 PM
Last Updated : 26 Mar 2021 04:00 PM

புதுச்சேரியில் 96 பேருக்கு கரோனா தொற்று; மொத்த பாதிப்பு 41 ஆயிரத்தை நெருங்கியது

பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 96 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் இன்று (மார்ச் 26) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 2,164 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 60 பேருக்கும், காரைக்காலில் 32 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் என மொத்தம் 96 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 679 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 40 ஆயிரத்து 836 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனா மொத்த பாதிப்பு 41 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 257 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 498 பேரும் என 755 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 402 ஆக உள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள் 23 ஆயிரத்து 377 பேர் (50 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 9,793 பேர் (38 நாட்கள்), பொதுமக்கள் 24 ஆயிரத்து 659 பேர் (22 நாட்கள்) என மொத்தம் 57 ஆயிரத்து 829 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x