Published : 16 Nov 2015 05:02 PM
Last Updated : 16 Nov 2015 05:02 PM
சென்னை, திருவள்ளூர் மற்றும் ஆந்திர கடலோரப் மாவட்டங்களில் கனமழை பெய்வதன் காரணமாக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் சில ரயில்களின் மார்க்கம் மாற்றப்பட்டுள்ளது.
அதாவது அரக்கோணம், ரேணிகுண்டா, குடூர் மார்க்கமாக மாற்றப்பட்ட ரயில்கள் விவரம் வருமாறு:
வண்டி எண் 12269 சென்னை-நிஜமுதீன் விரைவு ரயில்
வண்டி எண் 12842 சென்னை-ஹவுரா கொரமாண்டல் விரைவு ரயில்
வண்டி எண் 12656 சென்னை-நவஜீவன் விரைவு ரயில்
வண்டி எண் 12687 மதுரை-டெஹ்ராடூன் விரைவு ரயில்
வண்டி எண் 06336 கொச்சுவெலி-குவஹாத்தி விரைவு ரயில்
வண்டி எண் 22352 எஸ்வந்த்பூர்-பாடலிபுத்திரா வாராந்திர விரைவு ரயில்
வண்டி எண் 22860 சென்னை - பூரி வாராந்திர விரைவு ரயில்
வண்டி எண் 17643 சென்னை எழும்பூர்-காகிநாடா போர்ட் சர்கார் விரைவு ரயில்
வண்டி எண் 12669 சென்னை-சப்ரா கங்கா காவேறி விரைவு ரயில். இது இன்று மாலை 17.40 மணிக்குப் புறப்படுகிறது.
வண்டி எண் 12759 சென்னை செண்ட்ரல்-ஐதராபாத் சார்மினார் விரைவு ரயில் இன்று 18.10 மணியளவில் புறப்படும். இது ரேணிகுண்டா குடூர் வழியாகச் செல்லும்.
வண்டி எண். 12655 அகமதாபாத்-சென்னை நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் குடூர் ரேணி குண்டா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது
வண்டி எண் 12603 சென்னை-ஐதராபாத் விரைவு ரயில் ரேணிகுண்டா, குடூர் வழியாக வந்து சேரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT