Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM
இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள், பழைய காசோலைகளை பயன்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த ஆண்டு சிலபொதுத்துறை வங்கிகளை இணைத்தது. அதன்படி, யூனியன்வங்கியுடன் ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி இணைக்கப்பட்டன. எனினும், சேமிப்புக் கணக்கு அதே எண்ணில் தொடர்கிறது.
எனினும், பழைய வங்கியின் ஐஎஃப்எஸ்சி, எம்ஐசிஆர் கோடு ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாக யூனியன் வங்கி தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், இதற்காக, ஆந்திரா வங்கி,கார்ப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய காசோலைகளுக்கு பதில் புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
அதே சமயம், கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தி வரும் ஐஎஃப்எஸ்சி, எம்ஐசிஆர் கோடு ஆகியவை இடம்பெற்றுள்ள காசோலைகளை ஜூன் மாதம் வரை பயன்படுத்தலாம் என்று கனரா வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பழைய காசோலைகளை தொடர்ந்து பயன்படுத்தலாமா, அவ்வாறு பயன்படுத்தினால் அது செல்லுமா என்று தெரியாமல் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி தகுந்த விளக்கம் அளித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT