Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

ராணுவத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ராணுவ வீரருக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு

ராணுவ வீரர் முனியசாமிக்கு வரவேற்பு அளித்த நீராவி கரிசல்குளம் கிராம மக்கள்

கமுதி

ராணுவத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது ஓய்வுபெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நீராவி கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் இருளாண்டி மகன் முனியசாமி(48). இவர் கடந்த 25 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி பணி நிறைவு பெற்று நேற்று சொந்த ஊரான நீராவி கரிசல்குளத்துக்கு வந்தார். இவருக்கு கிராம மக்கள் சார்பில் மேளதாளங்கள் முழங்க, மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் ராமநாதபுரம் மாவட்ட ராணுவ வீரர்களின் சேது சீமை பட்டாளம் அமைப்பினர் கேக் வெட்டி, பொன்னாடை போர்த்தி ராணுவ வீரர் முனியசாமியை வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x