Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM

திருச்செந்தூர் கோயிலில் மார்ச் 28-ல் பங்குனி உத்திர விழா

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு 28-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து 6 மணிக்கு வள்ளியம்மன் தபசுக்கு புறப்பாடு, 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

மாலை 4 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி மேலக்கோயிலில் அம்மனுக்கு காட்சியருளுதலும், தொடர்ந்து பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி - அம்மன் தோள்மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். பின்னர், சுவாமி - அம்மன் வீதியுலா வந்து, கோயில் சேர்ந்ததும், இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவர் சன்னதி முன்பு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். இரவில் இராக்கால அபிஷேகம் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x