Published : 02 Nov 2015 08:28 AM
Last Updated : 02 Nov 2015 08:28 AM
கிறிஸ்தவர்களின் கல்லறை திரு நாள் இன்று (நவ. 2) அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த் தனைகள் நடக்கின்றன.
இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை கிறிஸ் தவர்கள் அனைத்து ஆன்மாக்கள் தினமாக கடைபிடிக்கிறார்கள். இது, கல்லறை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்துவர். கல்லறையை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களின் ஆன்மாவுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்வார்கள்.
கத்தோலிக்க திருச்சபையில் பாதிரியார்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று கல்லறைகளை மந்திரித்து திருப்பலி நிறைவேற்றுவார்கள்.
அனைத்து ஆன்மாக்கள் தினத்தை ஒட்டி சாந்தோம் கியூபிள் ஐலேண்ட் கல்லறை தோட்டத்தில் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார். இதில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT