Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

புதுவை காங்., சார்பில் போட்டியிட 161 பேர் விருப்ப மனு: இன்றுமுதல் நேர்காணல்

புதுச்சேரி

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 27-ம் தேதி முதல் விருப்ப மனு பெறபட்டு வந்தது. விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 161 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அதிகபட்சமாக திருபுவனை தொகுதியில் போட்டியிட 25 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x