Published : 10 Nov 2015 11:13 AM
Last Updated : 10 Nov 2015 11:13 AM
வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை முறையில் நடந்த பிரசவத்தில் 6.4 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.
வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(35). இவரது மனைவி உமா மகேஸ் வரி(29). இவர்களுக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளர். இதற்கிடையில் மூன்றாவதாக கருத்தரித்த உமாமகேஸ்வரிக்கு, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் நேற்று பிரசவம் நடைபெற்றது. இதில் 6.4 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை யில், ‘‘சர்க்கரை நோய் உள்ள தாய்க்கு அதிக எடையுடன் கூடிய குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், உமாமகேஸ்வரிக்கு சர்க் கரை நோய் பாதிப்பு இல்லை. இந்திய அளவில் கடந்த 3 நாட் களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6.7 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்துள்ளது. தமிழ்நாட் டில் அதிக எடையுள்ள குழந்தை உமாமகேஸ்வரிக்குத்தான் பிறந் துள்ளது’’ என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT