Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
புதுச்சேரி, காரைக்காலில் அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் அனைத்திலும் பல வீடுகள் ஆண்டு கணக்கில் காலியாக இருப்பதை அறிந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் பெற்றார். அதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் நேற்று புகார் அளித்துள்ளார்.
அதுதொடர்பாக ரகுபதி கூறியதாவது:
புதுச்சேரியில் லாஸ்பேட்டை, உழந்தை ஆகிய இடங்களில் அரசு குடியிருப்புகள் உள்ளன. இதில்உழந்தையில் 1, 2, 3 என மூன்றுபிரிவுகளாக உள்ள 186 வீடுகளில் 49 வீடுகளும், லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் 1 முதல் 5 பிரிவுகளாக உள்ள 616 வீடுகளில் 203 வீடுகளும் காலியாக உள்ளன. இதுபோல் காரைக்கால் கோட்டுச்சேரியில் உள்ள 102 வீடுகளில் 33 வீடுகளும், காரைக்கால் நேரு நகரில் உள்ள 60 குடியிருப்புகளுமே 2015 முதல் காலியாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தக வல் அளித்துள்ளனர்.
அரசு ஊழியர்களின் நலன் கருதி பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும், போதிய வசதி மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்களின் முறையான பராமரிப் பின்மையாலும், பெரும்பாலான அரசு ஊழியர்கள் இந்த குடியிருப் புகளை விரும்பவில்லை.
மேலும் 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர் களிடம் பிடித்தம் செய்யும் வீட்டு வாடகைப்படி மிக அதிகமாக உள்ளதாலும், இந்த வாடகைக்கு ஏற்ப குடியிருப்புகளில் போதிய வசதிகள் இல்லாததாலும் 2016-க்குபிறகு பல அரசு ஊழியர்கள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு, தனியார் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் தான் பெரும்பாலான குடியிருப்புகள் காலியாக உள்ளன. இதனால் அரசு நிதி மாதந்தோறும் லட்சக்கணக்கில் வீணாகி வருகிறது.
குறிப்பாக பொதுப்பணித் துறையினர் 14 ஐஏஎஸ், அதிகாரிக ளின் குடியிருப்புகளுக்கு 10 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 54 ஆயிரத்து88 ஆயிரம் செலவு செய்து சீரமைத்துள்ளபோது, அரசு ஊழியர்களின் 966 குடியிருப்புகளுக்கு இதே பத்தாண்டுகளில் வெறும் ரூ.65 லட்சத்து 69 ஆயிரம் செலவு செய்து பாரபட்சம் காட்டுவது ஏன்? எனவே பழுதான குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்.
வீட்டு வாடகை பிடித்தம் செய்து தொகைக்கு ஏற்ப குடியிருப்புகளை நவீன மயமாக்கி அரசு ஊழி யர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கும்பட்சத்தில் வீட்டு வாடகை படி மூலம் அரசுக்கு கோடிக்கணக்கான தொகை வருமானம் கிடைக்கும். எனவே இந்த மனுவினை பரி சீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT