Published : 14 Feb 2021 03:18 AM
Last Updated : 14 Feb 2021 03:18 AM

எதிர்பார்த்த சுகாதாரப் பணியாளர்கள் வராததால் வீணாகும் 6% கரோனா தடுப்பூசி மருந்து: சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் அரசு, தனியார்மையங்களில் முதல் கட்டமாகசுகாதாரப் பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக காவல், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கும் கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 2.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசி போட்டு28 நாட்கள் முடிவில் 2-ம் தவணைதடுப்பூசி போட வேண்டும். அதன்படி, கடந்த ஜனவரி 16-ல் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்ட 3,126 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் டீன்ஜெயந்தியும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் டீன் தேரணிராஜனும் தடுப்பூசிபோட்டுக்கொண்டனர். இதற்கானஏற்பாடுகளை சுகாதாரத் துறைசெயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:

முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 28 நாள் முடிந்ததும் 2-ம் தவணை போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கு 10 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு 2 பேர் வராவிட்டால் அவர்களுக்கான மருந்துவீணாகிவிடும். குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு அதை பயன்படுத்த முடியாது. இப்படி 6 சதவீத மருந்துகள் வீணாகி உள்ளன. சுகாதாரப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் 20-ம் தேதி வரைஅவகாசம் உள்ளதால், இந்தவாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x