Published : 11 Feb 2021 03:51 PM
Last Updated : 11 Feb 2021 03:51 PM

அரசு நிலம், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள வேண்டும்: அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை

அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என அரசு அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், அரசு நிலம், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராமாபுரம் பகுதியில் இருந்த சாலையை கோயில் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயில் நிர்வாகம் சாலையை ஆக்கிரமித்ததா, எப்போது இந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்காததால், அரசு நிலத்தை கோயில் நிர்வாகம் ஆக்கிரமித்திருந்தாலும், அவற்றை இடித்து தள்ள வேண்டும் எனத் உத்தரவிட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட அந்தப்பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வுக் குழுவில், மனுதாரர் பிரதிநிதியும், கோயில் நிர்வாக பிரதிநிதியும் இடம் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதேபோல, ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அரசு அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், அரசு நிலம், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x