Published : 10 Nov 2015 09:53 AM
Last Updated : 10 Nov 2015 09:53 AM

தீபாவளி திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி திருநாளில் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் என ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண் டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து ள்ளனர்.

ஆளுநர் கே.ரோசய்யா: தமிழகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனை வருக்கும் எனது தீபாவளி வாழ்த் துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீபஒளி திருநாளில் மக்கள் மனதில் அன்பும் அமைதியும் பெருகட்டும்.

முதல்வர் ஜெயலலிதா: மக் களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்கிய நரகாசுரனை திருமால் அழித்த தினம் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் கருதப் படுகிறது. இந்த திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும். வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மக்கள் தங்கள் வாழ்வில் செழிப்பும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்பட்டு வளமான வாழ்வு வாழ, ஒளிமயமான எதிர்காலம் அமைந்திட வேண்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: இருளை அகற்றி ஒளியை ஏற்றும் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி நாளில் வரும் மாசுக்களை உடனடியாக அகற்றி நாட்டையும், வீட்டையும் தூய்மையானதாக உருவாக்குவோம்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: ஒளிமயமான தீபாவளி திருநாளில், அனைவரது வாழ்க்கையிலும் வெளிச்சத்தை கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் வந்திருப்பது மகிழ்ச்சி. பாஜக சார்பில் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் எச்.வசந்தகுமார்: மத்தாப்பு கொளுத்தும் போது அதில் இருந்து வெளிப்படும் ஒளி யைப் போல், தீபாவளியை கொண்டாடும் அனைத்து மக்களின் வாழ்விலும் ஒளி பிறக்க வேண்டும்.

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், காங்கிரஸ் தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் ந.சேதுராமன், தமிழ்நாடு ஜனதாதள மாநில பொதுச் செயலாளர் ஜான்மோசஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரி வித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x