Last Updated : 08 Feb, 2021 06:31 PM

 

Published : 08 Feb 2021 06:31 PM
Last Updated : 08 Feb 2021 06:31 PM

பறவைகள் மோதாமல் இருக்க காற்றாலை மீது ஆரஞ்ச் வர்ணம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பறவைகள் மோதி உயிரிழப்பதைத் தடுப்பதற்காக காற்றாலைகள் மீது ஆரஞ்ச் வர்ணம் பூசக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை தத்தநேரியைச் சேர்ந்த செளந்தர்யா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் காற்றாலை மின்சாரத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மிக உயரமாக காற்றாலைகள் அமைக்கப்படுவதால் பறவைகள் காற்றாலைகளில் மோதியும், மின் கம்பிகளில்

மோதியும் 0.5 சதவீத பறவைகள் உயிரிழக்கின்றன. இதனால் பறவைகள் முற்றிலும் அழிவதற்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்துக்கு வெளிநாடுகளிலிருந்து குளிர்காலத்தில் அதிகளவு பறவைகள் வந்து செல்கின்றன. பறவைகள் மோதாமல் இருக்க காற்றாலை மீது ஆரஞ்ச் வர்ணம் பூச வேண்டும், காற்றாலைகள் சுற்றும் போது வரும் சப்தம் பறவைகளை துன்புறுத்தும் வகையில் இருக்கக்கூடாது, உயர் அழுத்த மின் கம்பிகளில் செல்லும் மின்சாரம் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடாது என 2004-ல் மத்திய அரசு வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை. எனவே, தமிழகத்தில் காற்றாலைகள் மீது பறவைகள் மோதி உயிரிழப்பதை தடுக்க காற்றாலைகள் மீது ஆரஞ்ச் நிற வர்ணம் பூச உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x