Published : 08 Feb 2021 06:32 PM
Last Updated : 08 Feb 2021 06:32 PM

தமிழகத்தில் இன்று 464 பேருக்குக் கரோனா; சென்னையில் 143 பேர் பாதிப்பு: 495 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று 464 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 261 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 464பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 186 தனியார் ஆய்வகங்கள் என 254 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று (பிப். 08) பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,354.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 64 லட்சத்து 39 ஆயிரத்து 856.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 51 ஆயிரத்து 613.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 261.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 464.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 143.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5 லட்சத்து 8,997 பேர். பெண்கள் 3 லட்சத்து 33 ஆயிரத்து 230 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.

* இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 269 பேர். பெண்கள் 195 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 495 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8 லட்சத்து 25 ஆயிரத்து 520 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 387 ஆக உள்ளது.

சென்னையில் இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 4,116 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்த அனைவரும் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்களாவர்".

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x