Published : 08 Feb 2021 03:09 AM
Last Updated : 08 Feb 2021 03:09 AM
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. இந்தப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.
விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அக்கட்சி விவசாயிகளுக்காக எதையும் செய்யாதது ஏன்? கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல்அறிக்கையில், வேளாண் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால்இப்போது அக்கட்சி இந்த விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT