Last Updated : 02 Feb, 2021 06:18 PM

 

Published : 02 Feb 2021 06:18 PM
Last Updated : 02 Feb 2021 06:18 PM

பிப்.6-ல் அம்பாசமுத்திரத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்: பூமி பூஜையுடன் ஏற்பாடுகள் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வரும் 6-ம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

வரும் 5-ம் தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையிலுள்ள கலைஞர் திடலிலும், மதியம் 1 மணிக்கு திருவைகுண்டம் பட்டாண்டிவிளை நட்டாச்சி ஊராட்யிலும் நடைபெறும் கூட்டங்களில் அவர் பேசுகிறார்.

அடுத்த நாள் 6-ம் தேதி காலை 8 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். அன்று மதியம் 1 மணிக்கு அம்பாசமுத்திரத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

7-ம் தேதி காலை 8 மணிக்கு சங்கரன்கோவிலில் சுரண்டை சாலையில் அண்ணா திடலில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார்.

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்துக்கான மேடை மற்றும் பந்தல் அமைப்பு பணிகள் இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா. ஆவுடையப்பன், அவை தலைவரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான மு. அப்பாவு, மாவட்ட துணை செயலாளர் எஸ்.கே. சித்திக், களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜன், கணேஷ்குமார் ஆதித்தன், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x