Published : 31 Jan 2021 03:15 AM
Last Updated : 31 Jan 2021 03:15 AM
கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பி வருவது பாஜகவின் வெற்றி என நடிகை குஷ்பு பேசினார்.
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் குஷ்பு பேசியதாவது:
பாஜக கடந்த 6 ஆண்டுகளாக என்ன செய்தது எனக் கேட்கின்றனர். கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த ஒரு சாதனை போதாதா?. அனைத்து நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசி அனுப்பி வருகிறோம். இது வெற்றி இல்லையா?.
நெற்றியில் வைத்த குங்கு மத்தை அழித்த மு.க.ஸ்டா லின் இப்போது கையில் வேல் எடுத்துள்ளார். இது பாஜகவின் வெற்றியாகும்.
காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தனர். அப்போது ராகுல் என்ன செய்தார்? தமிழ் மக்கள் மீது ராகுலுக்கு திடீரென அக்கறை, பாசம் வந்துள்ளது.
திருக்குறள் கற்று வருவதாக ராகுல் கூறுகிறார். 1,330 குறட்பாக்களையும் ராகுலால் கற்க முடியாது. முதலில் தமிழை தெளிவாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT